Trending

6/recent/ticker-posts

மழை பற்றிய கவிதைகள் தமிழில்

 மழை கவிதைகள்

மழை பற்றிய கவிதைகள் தமிழில்

கொட்டும் மழையைக் நீ .!

கொட்டும் அழகை ரசிக்க.!

ஒரு யுகம் போதுமா.!

 மழைத்துளி இசையால்.!

 மனம் மிதக்கும் மே ஆயிரம்.!

கவலைகள் இருந்தாலும் உடனே மறந்து செல்லுமே மெல்ல.!

மண்ணில் விழுந்து எழுந்து.!

 உயிருடன் கலந்த.!

மழைக்காக சூழ்ந்த மேகங்கள் மழையால் குளிர்ந்த பூச்செடிகள் மண்வாசனைக் மனம்.! 

ஏங்க மழையின் இசையில் .!

மயிலாட காற்றோடு காற்றாக மரங்களும் இசையோடு.!

முத்துப்போல மழைத்துளிகள் .!

முட்டாய் விழுந்திடும் மனதில்.!

 பல கோடி வண்ணம்..!


கார்மேக தோட்டத்தில்

 பூத்த கண்ணாடிப் பூவே 

காற்றில் பறந்து என் மீது 

விழுவது ஏனோ..!


உன்னை ரசிக்க தெரிந்த 

என்னை உரசிப் பார்க்க வந்தார் தொட்டுச் சென்ற நீ 

உன் குளிர்ச்சியை

மட்டும் விட்டுச் சென்றதேனோ..!

மழை பற்றிய கவிதைகள் தமிழில்


 உன் வருகைக்கு முன்னே

 குளிர் காற்றை அனுப்பி 

மண் மட்டுமல்ல மனங்களையும்

 குளிர் வடையை செய்தாய்.. !


பூமிக்கு நீ தந்த வருகையால் 

மலர்ந்தது மலர்கள் மட்டுமல்ல

 என் மனமும் தான்..!


 உன் வருகையால் எண்ணற்ற எண்ணங்கள் என்னுடன் ஓடமாய் பெருக்கெடுத்து  ஓடுகிறது 

 குடை கொண்டு உன்னை தடுக்க விரும்பாமல் கை விரித்து தலை உயர்த்தி உன்னை ரசிக்கிறேன்..!


 ஊசி போல் நீ வந்தாலும் என்னுடன் வழி ஏதும் தராமல் இருக்கிறாய் 

எனில் கரையாய் படிந்து என் கவலைகளை மறந்து நீக்கி சென்றாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தூதுவனாய் வந்து போகிறாய் நீரின்றி அமையாது இவ்வுலகில் இங்கு நீரும் இன்றி நீ அமையாது..!


முட்டுதடி மழை மேகம் 

கொட்டுதடி கருவானம் 

மின்னுதடி மலையோரம்

 தட்டுதடி இடி மேளம்

 கொட்டுதடி இலை தேகம் 

பட்டதடி இதழோரம் 

விட்டதடி மலை வானம் 

நிலவும் வந்ததடி ஜன்னல் ஓரம்..!


கண்ணாடி பூக்களாய் 

மண்மீது உடையதாய்

 கண் மூடி திறக்கும் முன்னே காணாமல் போகிறாய்..!


கருமேகம் கூந்தல் விரித்து கண்ணகியால் வருகின்றாள் 

சிலநேரம் பெருக்கெடுத்து 

சினம் கொன்று போகிறாய்..!

மழை பற்றிய கவிதைகள் தமிழில்


சிலுசிலுவென போலிகின்றாய் 

சிறு துளியாய் விழுகின்றாய் சிதறடிக்கும் பறவைபோல் சிந்திசைத்து ஒலிக்கின்ற..!


கொலுசும் பாதங்களை

 கொஞ்சி அவள் வருகின்றாள் 

புஞ்சை நஞ்சை எல்லாம் 

புதிதாய் புன்னகைக்க..!


பிஞ்சு பூக்கள்ளெல்லாம் 

பூவாய் பூத்திருக்க பச்சை 

பாய்விரித்து இயற்கையை தாலாட்ட வான் மகளின் மழை மகளாய்..!


மண் வாசம் மணக்கிறதே மனதெல்லாம் குளிர்கிறதே

 இலை சிதறும் சிறு துளிகள்

 சிந்தும் மணி முத்து..!


ஆகாய கங்கை யாய்

 ஆடிப் பாடி வருகின்றார்

 பூமகள் உன் தேகம் தொட்டு 

நீராடி வருகின்றாள்..!


சில்லென்ற மழைத்துளியாய் 

சிதறி விழும் மழைத் துளியாய்

நில்லென்று என் மேனி தொட

எல்லாமே விரைவில் வாடா..!


கூன் விழுந்த விவசாயி 

கூறி உன்னை அழைத்தாலும் 

வான் கடவுள் அனுமதித்தால்

 வரமாய் வருகின்றாய்..!


ஏரி குளம் நிரம்பி வழிய

மாரியாயி நீ வாடா

மழையே அழகே வா

சாரலாய் நீ வா..!


தனிமையில் நான் கவிபாட

தமிழாய் நீ வா

தரணி செழித்திட வே

தங்கமே நீ வா

தளிரின் அழகே

கருவின் உயிரே

வருக வருக வே

மை போலிகவே நீ வா..!

மழை பற்றிய கவிதைகள், rain kavithaigal in tamil

Post a Comment

0 Comments