Trending

6/recent/ticker-posts

தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes in Tamil

 தன்னம்பிக்கை கவிதைகள்


 என் கனவுகள் 

 அலாதியானவை

 இலக்குகள் 

 உயரமானவை!


நான் தொட நினைப்பதெல்லாம் வெற்றியின் வேர்களை 

அல்லவா!

நான் அடைய 

நினைப்பதெல்லாம் 

நட்சத்திரத்தின் தோள்களை 

அல்லவா!


வெற்றியின் வார்த்தையை 

தவிர வேறு எதையும் 

நான் சந்திப்பது இல்லை!



இலக்கு என்ற வார்த்தை 

தவிர வேறு எந்த பாதையில் 

நான் பயணிப்பதில்லை!


முடியாது என்று சொன்னவன்

 இன் முகத்தில் எல்லாம் என் வெற்றியை அடைந்து

 சொல்ல ஆசை!


முடியாது என்று

 சொன்னவர்கள் எல்லாம் 

என் புத்தியால் வென்று

 தீர்க்க ஆசை!


உலகை வெல்ல

 முதலில் உன்னை வெல்

சோம்பேறித் தனத்தை விட 

மிகப் பெரிய எதிரி இல்லை 

அவனை நீ வீழ்த்தாமல் 

அடுத்த இலக்கு சாத்தியமில்லை .


வெற்றி என்ற ஊருக்கு 

தடைகளை அது கூறும்

 வழிகாட்டலில் பயணம் 

மேற்கொள்ள .


உயிர் பயத்தில் ஓடும் மானாய்

 உன் இலக்கை தேடி ஓடு

 பசியோடு பாயும் புலியாய் 

இலக்கை மட்டும் குறியாய் தேடு .


ஆகாய சூரியனை அனைத்தும் வியர்வைத்துளி வறுமையும் வெறுமையும் கண்டு கண்ணீர் வடிக்கலாம் கண்ணீர் துளி அடக்கி விட்டால் ஆயுதத்தையும் வெல்லலாம் ஆசைப்பட்ட அனைத்தையும் அடைந்து வெற்றி கொள்ளலாம் .


உன்னை நீ வெல்லாமல்

 உலகை வெல்ல முடியாது 

ஆயிரம் சூரியன் வந்தாலும் நீ தூங்கினால் விடாதே .


அகவிழி தூங்கவிட்டு

 புறவெளியில் தேடாதே

 புற விழியை தூங்கவிட்டு 

அகவையில் சேராதே இயங்காமல் இலக்கை அடைய முடியாது .


இரு விழியும் திறவாமல் எதிர்காலம் பிறவாதே உலகை வெல்ல முதலில் உன்னை நீ வெல் முயன்றிடு முயன்றிடு விதியினை .


இந்த உலகமே உந்தன் 

கையில் உயிரே உழைத்திட 

வாழ்வும் உயர்ந்திட

 செல்வமும் சேரும் உந்தன் பையில் .


உள்ள உறுதியுடன் உயரிய எண்ணம் உடன் கொண்டிரு நல்ல லட்சியம் கவலை கொள்ளாமல் தளர்ந்து இல்லாமல் உழைத்தால் வெற்றி நிச்சயம் முடியாது என்று நினைத்தாலும் எதுவும் முடியாமல் தான் போகும் முடியும் என்று முயன்று உழைத்திட எதிலும் வெற்றி தோன்றும் .


கடின உழைப்பே வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கும் யாருக்கும் சளைத்தவன் நான் இல்லை எனும் தன்னுடைய நம்பிக்கை தான் இங்கு தன்னம்பிக்கை எனப் அது .


தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை தன்னால் 

மட்டும் தான் முடியும் என்பது தலைக்கனம் .


வெற்றி என்னும் நிழல் 

உன்னை வந்தடைய தோல்வி 

எனும் ஒளியை கடந்து தான் 

செல்ல வேண்டும் .


வெற்றி உன்னை சிரிக்க வைக்கும் தோல்வி உன்னை சிந்திக்க வைக்கும் வெற்றியை தன் தலையில் வைப்பவனும் தோற்றுப் போகிறான் தோல்வியை தன் மனதில் வைப்பவனும் தோற்றுப் போகிறான் .


வெற்றியை மனதிலும் தோல்வியை தலையிலும் வைப்பவன் மட்டுமே இங்கு வெற்றி அடைகிறான் தோற்று விடுவோமோ என்கிற பயத்தை விட மற்றவர்கள் வெற்றி பெற்று விடுவார்களோ என்கிற பயம் தான் இங்கு அதிகம் .


முடியாது என்று சொல்லி 

மூலையில் முடங்கி கிடப்பதை காட்டிலும் முடியும் என்று எண்ணி முயற்சி செய்வதில் தவறில்லை .


சிலந்தி வலையில் சிக்கி

 தவிக்கும் சிறு பூச்சியை போல் வாழ்க்கை என்னும் தீர்க்கும் வாழ்ந்து மடியாதே .


முடியும் வரை முயற்சி செய் 

உன்னால் முடியும் வரை அல்ல 

நீ நினைத்த காரியம் முடியும் 

வரை.


 தோல்வி என்பது முடிவு அல்ல

 வெற்றி என்பது எழுதும் அல்ல 

முயற்சி ஒன்று இருந்தால் போதும் 

தோல்வியை எளிதில் வென்றிட முடியும் .


தோல்வி எனும் இருள் உன்னை சூழ்ந்து கொண்டாலும் 

முயற்சி எனும் மேலே ஏற்றினாள் வெற்றி எனும் ஒளி வந்து இருளை நீக்கும் .


செய் அல்லது செத்து மடி 

என்பதல்ல வாழ்க்கை

 செய் அல்லது முயற்சி 

செய் என்பது தான் வாழ்க்கை.

Post a Comment

0 Comments